திருமதி றீற்றம்மா இம்மானுவல் (ராசாத்தி)
யாழ்ப்பாணம், மாட்டீன் ஒழுங்கையை பிறப்பிடமாகவும், 842, ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி றீற்றம்மா இம்மானுவல் 13.11.2017 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஜோசப் – மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனியூட் இம்மானுவலின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தோமஸ் – பொன்றோஸ் தம்பதிகளின் மருமகளும், குயின்ரஸ் ஜீவன் (Nothern Office Automation உரிமையாளர்), சந்திரிக்கா (ஜேர்மனி), கேந்திரா விவியன் ஆகியோரின் அன்புத் தாயாரும், மோகனா (ஆசிரியர் – யா/ புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்), சத்தியேந்திரன் (லண்டன்) ஆகியோரின் மாமியாரும், திரேசம்மா அமரசிங்கம், மேரி மாக்கிரட் கனகசபை ஆகியோரின் சகோதரியும், வயலற் இம்மானுவலின் மைத்துனியும், வதனி, ராஜன், பபி. லதா, துஸ்யந்தன் (U.S.Hotel உரிமையாளர்), ஜெயாலினி, ரஜனி, ஜெயபவானி, ஜெயமாலினி ஆகியோரின் சிறிய தாயாரும், பிறையன், ரிறோன், கெவின், அறோன் ஆகியோரின் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (15.11.2017) புதன்கிழமை பிற்பகல் 3 மணியள வில் சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு யாழ்.புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.